கடல்பசுக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு காங். எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு..!!
2022-01-24@ 17:16:05

டெல்லி: கடல்பசுக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 ச.கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடல்வாழ் பாலூட்டி விலங்குகளில் தாவரங்களை உண்டு வாழும் ஒரே உயிரினம் கடல் பசு மட்டும் தான். கடல்பசுக்களின் சரணாலயமாக அறிவித்த கடல் பகுதியில் தாவரங்களும் பாதுகாக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லுயிர் பெருக்க திருத்தச் சட்ட மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து கூறியதாக கூறினார். கடல்பசுப் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைபோல் மேலும் பல நடவடிக்கைகள் தேவை எனவும் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!