யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்க முயன்ற தந்தை, மகன் கைது
2022-01-24@ 17:07:59

திருச்சி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்பனை செய்த 2 பேரை வனத்துறையினர் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சி துவாக்குடி அருகே தேவராயநேரி நரிக்குறவர் காலனி பகுதியில் 2 பேர் யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்பது தெரிய வந்தது. இதையடுத்து வன சரகர்கள் தேவராயநேரி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சோதனையில் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சவுந்தரராஜன்(52), அவரது மகன் அருண்பாண்டி(28) ஆகியோரிடம் சிறிய அளவிலான யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை தந்தத்தை துண்டுகளாக்கி செயின், மோதிரங்களில் பதித்து அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 3 செமீ நீளம், 1.5 செமீ அகலத்தில் இருந்த யானை தந்தத்தில் இருந்த 2 புலி பல், மீதமுள்ள 3 சிறிய அளவிலான யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையில் யானை தந்தம் வாங்கியதாக தெரிவித்தனர். தொடர்ந்து, இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் யானை தந்தம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!