பழைய, புதிய பஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு-வேலூர் மாநகராட்சி நடவடிக்கை
2022-01-24@ 12:57:32

வேலூர் : வேலூர் மாநகராட்சி சார்பில் சிஎம்சி மருத்துவமனை வளாகம், பழைய, புதிய பஸ் நிலையங்கள், தங்கும் விடுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் முழு ஊரடங்கு காரணமாக பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் பழைய, புதிய பஸ் நிலையங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்தனர்.
அதேபோல் சிஎம்சி மருத்துவமனைக்கு அதிகளவில் நோயாளிகள் வருவதை கருத்தில் கொண்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவு, சிஎம்சி வளாகத்தில் உள்ள சாலைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும் பாபுராவ் வீதி, மெயின் பஜார், மிட்டா அனந்தராவ் வீதி, பேரி பக்காளி தெரு, லத்தீப் பாஷா தெரு, சுக்கைய வாத்தியார் தெரு, ஜெயராமசெட்டிதெரு, ஆற்காடு சாலை, தோட்டப்பாளையம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், மேன்சன்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!