ஒமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும்!: 4வது அலை இந்தியாவில் இருக்காது என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை..!!
2022-01-24@ 12:15:45

டெல்லி: ஒமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் அமைதியாக, அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இது அரசுகளையும், மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் லேசான மற்றும் அறிகுறியற்றதாக இருந்தாலும் தற்போதைய அலையில் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒமிக்ரான் அலையால் கொரோனாவே முற்றிலும் முடிவுக்கு வரும் என புனேவை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர், ஸ்பானிஸ் காய்ச்சலை போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும், இரண்டாவது அலை கொடூரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலைக்கு பிறகு ஸ்பானிஸ் காய்ச்சல் மிகவும் லேசாக அதாவது சாதாரண ஜலதோஷம் போலவே மாறியதாக கூறினார். அதைப்போலவே கொரோனாவின் 3வது அலையும் இரண்டாவது அலையை விட லேசாகவும், அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பிறகு இந்தியாவில் 4வது அலை இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
பிரதமர் மோடி பேச்சு அடுத்த 10 ஆண்டில் 6ஜி சேவை
ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்
5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
நிலக்கரி ஊழலில் தொடர்பு மம்தாவின் மருமகனிடம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!