கொரோனா தொற்றின் 3வது அலை பிப்ரவரி 6-க்குள் உச்சம் அடையும் : சென்னை ஐஐடி கணிப்பு!!
2022-01-24@ 11:31:10

சென்னை : கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்த 2 வாரங்களில் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி கணித்துள்ளது. இந்தியாவில் டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களின் பரவலால் 3வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தினசரி தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் என வீதத்தில் உள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா 3வது அலை எப்போது உச்சம் அடையும் என்பது பற்றி சென்னை ஐஐடி-யின் கணிதவியல் துறையும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலமாக கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்தனர். தற்போது ஆர் வேல்யூ எனப்படும் கொரோனா மொத்த பரவல் விகிதம் 1.57% ஆக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் இருந்து பெறப்பட்ட பரவல் விகித தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆர் வேல்யூ உச்சம் அடையும் என்பதையே உணர்த்துவதாக ஐஐடி தெரிவித்துள்ளது. தம்முடைய கணக்கீட்டின் படி கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாட்களில் அதவாது பிப்ரவரி 6ம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி கூறியுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 1 முதல் 15ம் தேதிகளுக்கு இடையே கொரோனா 3வது அலை உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!