நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனா; நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று
2022-01-24@ 10:00:36

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் 2,847 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 271 பேர் மாநிலங்களவையிலும் மற்றவர்கள் மக்களவையிலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.
இதனிடையே குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 15 மாதங்களில் 2வது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தலைவர் மற்றும் பெருமளவு ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா..2,582 பேர் குணமடைந்தனர்..10 பேர் பலி!!
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!