நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 55 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்
2022-01-24@ 08:32:06

சித்தூர் : ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரம் வெட்டி லாரியில் கடத்த முயன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் உட்பட 58 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லூர் மாவட்டம் சின்னக்கூறு மண்டலம் புத்தானம் அருகே சென்னை - நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த லாரி மற்றும் காரை நிறுத்த முயன்ற போது, கடத்தல்காரர்கள் போலீசார் மீது லாரியை ஏற்றி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. சுதாரித்த போலீசார் லாரியை சுற்றி வளைத்த போது, லாரியில் இருந்த கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது கோடாரிகளை வீசியதாக கூறப்படுகிறது.
இறுதியாக போலீசார் அந்த கடத்தல் வாகனங்களை மடக்கி 55 கூலி தொழிலாளர்கள் மற்றும் 3 கடத்தல்காரர்களை கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 36 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் 24 கோடாரிகள், 31 செல்போன்கள், ரூ.75,250 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த பெருமாள் வேலுமலை என்பவரது உத்தரவின் பேரில் இவர்கள் கடத்தலில் ஈடுபட்டதும் இவை அனைத்தும் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து சீனா, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!