திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் வழியாக 3.77 லட்சம் பேர் தரிசனம்: ரூ.26.06 கோடி காணிக்கை
2022-01-24@ 04:21:50

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் என்றும் அழைக்கப்படும், சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தால் வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலை போல் திருப்பதியிலும் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்கலாம் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்தாண்டும், இந்தாண்டும் 10 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, இம்மாதம் 13ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 10 நாட்கள் முடிந்ததால், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சொர்க்க வாசல் மூடப்பட்டது. தொடர்ந்து, நேற்று முதல் வழக்கம்போல் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சொர்க்க வாசல் வழியாக 10 நாட்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 943 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 999 பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடித்துள்ளனர். இந்த 10 நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.26.06 கோடி கிடைத்துள்ளது.
அடுத்தாண்டு 2 வைகுண்ட ஏகாதசி
அடுத்தாண்டில் (2023) 2 வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. அப்போது ஜனவரி 2ம் தேதியும், டிசம்பர் 23ம் தேதியும் இருமுறை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக 20 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!