வட்டார கல்வி மைய பொருட்கள் சேதம் தொடக்கப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
2022-01-24@ 00:47:29

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக தைலம்மை என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் கல்வித்துறை, ஆசிரியை தைலம்மைக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்காமல் நிறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தைலம்மை கடந்த 20ம் தேதி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதை தொடர்ந்து ஆசிரியர் தைலம்மையை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை தேர் விபத்து: அஜாக்கிரதையாக செயல்பட்ட கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்.. அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு..!!
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!