உறவினர் வீட்டில் பீரோவை திறந்து 21 சவரன், ரூ.2 லட்சம் திருடிய சலூன் கடைக்காரர் சிக்கினார்
2022-01-24@ 00:03:05

சென்னை: திருவல்லிகேணி வெங்கடாச்சலம் 3வது தெருவை சேர்ந்த சாரதி (28), என்பவரின் வீட்டு பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி கொள்ளை போனது. இதுகுறித்து சாரதி அளித்த புகாரின் பேரில், ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், சாரதி குடும்பத்திற்கு அறிமுகமான சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்த சுமன் (23) என்பவர், சம்பவ தினத்திற்கு முதல்நாள் சாரதி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சலூன் கடை நடத்தி வரும் சுமனை பிடித்து விசாரித்தபோது, ஜூலை 17ம் தேதி சாரதியின் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்தவர்கள் அசந்த நேரத்தில் பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சுமனை கைது செய்து அவரிடமிருந்து 21 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:
At the relative's house 21 shavers Rs 2 lakh stolen saloon shopkeeper உறவினர் வீட்டில் 21 சவரன் ரூ.2 லட்சம் திருடிய சலூன் கடைக்காரர்மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!