கோவாவில் துண்டுகளாக உடையும் பாஜக: கட்சி தலைமை கலக்கம்..!
2022-01-23@ 13:44:36

பனாஜி: கோவாவில் பாரதிய ஜனதா கட்சியில் சிறிய சிறிய துண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சரும் அந்த கட்சியின் மூத்த தலைவருமான லட்சுமிகாந்த் பர்சேகர் கட்சியில் இருந்து விலக போவதாக அறிவித்திருப்பது கட்சி தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 64 வயதான லட்சுமிகாந்த் பர்சேகர் கோவாவின் மாண்ட்ரெம் தொகுதியில் 2002 - 2017 ல் எம்எல்ஏவாக இருந்தவர். அத்துடன் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சரவைக்கு அழைக்கப்பட்ட போது 2014 - 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஆனால் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள லட்சுமிகாந்த் பர்சேகர், தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களம் கண்டு தலைமைக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். தனக்கு சீட் வழங்காததால் கடும் கோபம் அடைந்த பொதுப்பணித்துறை அமைச்சர் தீபக் புஷ்கர், தனது எம்எல்ஏ பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். கோவா துணை முதலமைச்சரின் மனைவியான சாவித்ரி கவ்லேகர் பாஜக மகளிரணி துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் சுயேட்சையாகவும் களம் காண்பதாகவும் அவர் அறிவித்தார். மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால், கட்சியில் இருந்து விலகியதுடன் சுயேட்சே வேட்பாளரானார். இது பாரதிய ஜனதாவை பெறும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!