மும்பையில் பரபரப்பு 20 மாடி கட்டிடத்தில் தீ 7 பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்
2022-01-23@ 00:42:47

மும்பை: மும்பையில் 20 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.மும்பை தாட்தேவ் கவாலியா டேங்க், நானா சவுக், காந்தி மருத்துவமனை எதிரே 20 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று அதிகாலை 7.30 மணியில் 19வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென 20வது மாடி வரை பரவியது. அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் 18 முதல் 20வது மாடியில் வசிக்கும் சிலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கிய குடியிருப்புவாசிகளை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்தது. பகல் 12.30 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தீயில் சிக்கியும், மூச்சு திணறியும் குடியிருப்புவாசிகள் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 23 பேர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் தலா ரூ.5 லட்சமும், ஒன்றிய அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்