கும்மிடிப்பூண்டி பஜாரில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
2022-01-23@ 00:38:17

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜாரில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி பேருராட்சி செயல் அலுவலர் யமுனா, நகரச்செயலாளர் அறிவழகன், மருத்துவ அலுவலர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.தர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பாஸ்கரன், இயேசு ரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு, ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பூஸ்டர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மட்டும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1,27,775 பேர் (86%), 2வது தவணை 85,227 பேர் (57%), 15 வயதில் இருந்து 18 வயது மாணவ, மாணவிகள் 5889 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இன்று(நேற்று) தொடங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி 69 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு செவிலியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும் என அனைவரும் உறுதி ஏற்கவேண்டும், என்றார்.
மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு நில அளவீடு பணிக்கு வந்த என்எல்சி அதிகாரிகளை தடுத்து மக்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன்:பேரறிவாளன் பேட்டி
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை பலி
நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்