பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா முகைதீன் நியமனம்: முதல்வர் உத்தரவு
2022-01-23@ 00:27:40

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வகுத்து தந்த சமூகநீதி பாதையில் இந்த அரசு நடைபோடுகிறது. மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இவர்களது ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில், பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ளும் பொருட்டு, பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் ஓர் நிறுவனம் ஆகும். இந்த கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திடும் நோக்கில், அதன் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
பூந்தமல்லியில் 6.14 நிமிடம் ஓம்கார ஆசனம் செய்து 7 வயது சிறுவன் உலக சாதனை
தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்: புதிய மேம்பாலம் கட்டப்படுமா?
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்: ஜி.கே வாசன் கோரிக்கை
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
பேராசை..பெருநஷ்டம்: அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ.13,125 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்கள்..பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விளக்கம்..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!