வெள்ளை மாளிகை ராணுவ தலைமை பதவி பைடனின் நம்பிக்கையை பெற்ற இந்திய அதிகாரி திடீர் விலகல்
2022-01-23@ 00:08:38

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக கடந்தாண்டு பொறுப்பேற்ற ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கி கவுரவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் தலைமை ராணுவ அதிகாரி பணி மிக முக்கியமானது. ஏனெனில், அதிபரின் உள்ளூர் சாலைப் போக்குவரத்து, வெளிநாட்டு பயணம், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள், அதிபர் பயணிக்கும் ஏர்போர்ஸ் ஒன் விமானம், தகவல் பாதுகாப்பு, உணவு சேவை, மருத்துவம் என அதிபர், அவரது குடும்பத்தினரின் ஒட்டு மொத்த பாதுகாப்புக்கும் இந்த தலைமை ராணுவ அதிகாரியே பொறுப்பாவார்.
இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்பதவியில் இருந்து வந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஜூ வர்கீஸ், தனது தனிப்பட்ட காரணத்துக்காக பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார்.அதிபர் தேர்தலில் போட்டியிட பைடன் தேர்வானது, 2020 அதிபர் தேர்தல் பிரசாரம், பைடனின் வெள்ளை மாளிகை பயணம் என அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும், மூத்த ஆலோசகர், தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் நீண்ட காலம் வர்கீஸ் இருந்துள்ளார். பைடனின் நம்பிக்கைக்குரிய இவர், ஒபாமா அதிபராக இருந்தபோதும் அவருடன் பணியாற்றியவர். இவருடைய திடீர் பதவி விலகல், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!
இலங்கையை கொடிய உணவு பஞ்சம் தாக்குவது உறுதி... மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் : பிரதமர் ரணில் உத்தரவு!!
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.61 கோடி ஆக உயர்வு!!
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்