ஐபிஎல் 15-வது தொடர் : புதிதாக களமிறங்கும் இரு அணிகள்: மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும்: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்
2022-01-22@ 21:49:08

டெல்லி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபிeல் கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற நிலையில் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என ஜெய் ஷா தெரிவித்தார்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்த காரணத்தால் ஐபிஎல் 13-வது தொடர் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. அதேபோல் 14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடர் எங்கு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!
பைனலுக்கு எந்த ராயல்? ராஜஸ்தான் -பெங்களூர் மோதல்: இன்று 2வது தகுதிச் சுற்று
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி: அறிமுக வீராங்கனை லியோலியா வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4ல் இந்தியா
சில்லி பாய்ன்ட்...
சர்வதேச நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கருக்கு தங்கம்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!