கமுதி அருகே டிப்பர் லாரி மோதி 56 ஆடுகள் நசுங்கி பலி
2022-01-22@ 20:00:24

கமுதி: கமுதி அருகே டிப்பர் லாரி மோதியதில் 56 செம்மறி ஆடுகள் பலியாகின. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியசாமி (45) மற்றும் நாகராஜ் (40). இவர்கள் செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு இரவில் கிடை அமர்த்துவதற்காக கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் காவடிபட்டி பகுதியில் இரவு 8 மணியளவில் ஆடுகளை ஓட்டி சென்றனர்.
அப்போது அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டு கூட்டத்தில் புகுந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 56 ஆடுகள் நசுங்கி பலியாகின. மேலும் ஆடுகளை ஓட்டி வந்த நாகராஜ் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
மதியநல்லூரில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்