6 வயது சிறுமியை 7 வருடமாக பலாத்காரம் செய்தவருக்கு 27 வருடம் கடுங்காவல் சிறை
2022-01-22@ 19:19:16

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது முதல் 12 வயது வரை சிறுமியை பலாத்காரம் செய்த உறவினருக்கு 27 வருடம் கடுங்காவல் சிறையும், ₹ 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா ஆனப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் காணி (55). பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவரின் மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்து வந்து உள்ளார். 6 வயது முதல் சிறுமியை கொடுமைப்படுத்த தொடங்கிய பிரபாகரன், கடந்த 2019ம் ஆண்டு வரை 7 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து தன்னுடைய ஆசிரியையிடம் சிறுமி பிரபாகரன் தன்னை பலாத்காரம் செய்து வருவது குறித்து கூறினாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, விதுரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நெடுமங்காடு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பில்குல், பிரபாகரன் காணிக்கு 27 வருடம் கடுங்காவல் சிறையும், ₹ 65 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!