லக்னோ அணியின் கேப்டனாக ரூ.17 கோடிக்கு ராகுல் ஒப்பந்தம்
2022-01-22@ 15:22:35

மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளது. அடுத்த சீசனுக்கான வீரர்கள் பொது ஏலம் பிப்.12, 13ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஆனால் ஏலத்திற்கு முன் 2 புதிய அணிகளும் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எல்.ராகுலை லக்னோ அணி ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக ராகுல் மாறி உள்ளார்.
இதற்கு முன் கோஹ்லியை 2018ம் ஆண்டு பெங்களூரு அணி 17 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராகுலை தவிர லக்னோ அணி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டோனிசை 9.2 கோடிக்கும், லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்யை ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 3 பேருக்கும் அந்த அணி ரூ.59.89 கோடி செலவிட்டுள்ளது. மேலும் கேப்டனாக ராகுல் செயல்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபிளவர் பயிற்சியாளராகவும், கவுதம் காம்பீர் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
சில்லி பாயின்ட்...
இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!