நெல் சாகுபடியில் போதிய வருமானம் இல்லாததால் கரும்பு சாகுபடி: இரட்டிப்பு லாபம் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி
2022-01-22@ 14:22:06

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காததால் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு நடைபெற்று வந்த நெல் சாகுபடி தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 20,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த நெல் சாகுபடி படிப்படியாக குறைந்து தற்போது 6,000 முதல் 7,000 ஹெக்டேராக குறைந்துள்ளது.
நெல்சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நட துவங்கியுள்ளனர். அதன்படி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கரும்பு பயிரிடுவதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.2 லட்சம் வரை கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் பெருமளவு விவசாயிகள் கரும்பு பக்கம் தங்கள் கவனத்தை செலுத்த துவங்கியுள்ளனர்.
மேலும் செய்திகள்
நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு
மின்சார சட்ட திருத்த மசோதாவால் இலவச மின்சாரம் திட்டம் பாதிக்கும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
வேலூரில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைத்த அவலம்
ரேஷன் கடை, குடிநீர் நிலையம்: திருவள்ளூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பூந்தமல்லி அருகே பரபரப்பு: ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில், வீடு அதிரடியாக இடிப்பு
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!