ஏமன் சிறைச்சாலை மீது சவுதி குண்டுவீச்சு 100 கைதிகள் பலி
2022-01-22@ 00:12:49

துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபி விமான நிலையம் அருகே சில தினங்களுக்கு முன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சவுதி படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஏமன் நாட்டிலுள்ள சாதா மாகாணம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள சிறை மீது சவுதி கூட்டுப் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அங்குள்ள சிறையில் இருந்த கைதிகள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட வீடியோவில், மீட்பு படையினர் சிறைக் கட்டிடங்களில் இருந்து சடலங்களை இழுத்து வந்து குவியலாக குவிக்கும் கொடூரமான காட்சி இடம் பெற்றுள்ளது.இது குறித்து ஏமன் செஞ்சிலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் பஷீர் உமர் கூறுகையில், `சிறை தாக்குதலில் காயமடைந்த 200 பேர் சாதாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது,’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்