தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
2022-01-22@ 00:12:22

மதுரை: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதம் மாறச்சொல்லி பள்ளியின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக திடீர் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நேற்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவியின் பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும். தற்போது விசாரணை செய்யும் போலீசார் எவ்வித குற்றச்சாட்டும் எழாத வகையில் முறையாக வழக்கை விசாரணை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி 4ம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்