சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சரிவு
2022-01-22@ 00:05:35

சென்னை: தங்க விலையில் கடந்த சில மாதமாக ெதாடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.51 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,588க்கும், சவரனுக்கு ரூ.328 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் சவரன் ரூ.408 உயர்ந்தது. இது, நகை வாங்குவோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று காலையும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது.
நேற்று காலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,594க்கும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,752க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.37 ஆயிரத்தை நெருங்கி வந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் ‘திடீரென’ குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,572க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது
தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்... வாங்க முடியாத உச்சத்தில் விலை : ஒரு சவரன் ரூ.248 உயர்ந்து ரூ.38,288 விற்பனை!!
இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.73ஆக சரிவு!!
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி இழப்பு
இம்மாதத்தில் 2வது முறையாக சமையல் காஸ் விலை அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,018.50 ஆனது
இன்று சற்று உயர்ந்த தங்கத்தின் விலை.. ஒரு சவரன் ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை...நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்