வாகன சோதனையில் 40 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
2022-01-21@ 19:18:02

கமுதி: கமுதி அருகே, 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள வங்காருபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அபிராமம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆட்டோவில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த கபூர்முகமது மகன் அப்துல்ரஹீம்(33), நைனார்முகமது மகன் முகமதுபரூக் என்பதும், அபிராமத்திலிருந்து, பார்த்திபனூருக்கு 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரூ.46,900 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
குமரி அருகே காரில் கஞ்சா கடத்தல் மும்பை எஸ்ஐ கணவர் சிக்கினார்
கணவர் விவாகரத்து கேட்டதால் புதுப்பெண் தூக்கிட்டு சாவு
கலப்பட பெட்ரோல் விற்ற 2 பேர் கைது
உடலை பேரலில் அடைத்து நிலத்தில் புதைத்த கொடூரம் தந்தையின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: pமகனைப்பிடிக்க 5 தனிப்படைகள் pபுதைக்க உதவிய ஆட்டோ டிரைவர் கைது
அதிமுக மாவட்ட மாணவரணி தலைவருக்கு சரமாரி வெட்டு: போதை ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்