அதிமுக ஆட்சியில் முடங்கிய தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பெண்கள் வரவேற்பு
2022-01-21@ 16:57:10

சென்னை: அதிமுக ஆட்சியில் நிதிப்பற்றாக்குறையை காரணமாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் துவங்கி பெண்களுக்கு தங்கம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் மனதார நன்றி தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த 2018ஆம் ஆண்டு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்திருந்தனர். ஆனால் நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை முடக்கி வைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் துவக்கி கட்சி பாகுபாடின்றி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் துவக்க காத்திருக்கும் பெண்களுக்கு தங்கம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் மனதார நன்றி தெரிவித்தனர்.
Tags:
தாலிக்கு தங்கம்மேலும் செய்திகள்
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க முயற்சி மாணவர்களிடம் ‘மைக்ரோ ஜெராக்ஸ்’ பிட் பேப்பர்கள் ஒரு கிலோ பறிமுதல்: நாமக்கல்லில் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!