முல்லை பெரியாருக்கு எதிராக அறிவியல்பூர்வமான ஆதாரம் உள்ளதா? உச்ச நீதிமன்றம் விசாரிக்க மனு
2022-01-21@ 00:06:58

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான பிரதான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 10ம் தேதி இது விசாரணைக்கு வந்தபோது, அணை பாதுகாப்பு விவகாரத்தில் எந்தெந்த விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது ஒன்றாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கும், வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை சீனியர் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று எதன் அடிப்படையில் கேட்கிறார்கள், அதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறதா? அதேப்போன்று அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால் கீழ் பகுதி மக்கள் பாதிப்படைகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஆதாரம் என்ன? அனைத்து விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
Tags:
To Mulla Periyar Scientific Evidence Supreme Court Petition முல்லை பெரியாருக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் உச்ச நீதிமன்றம் மனுமேலும் செய்திகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி
நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்