காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி: எஸ்பி துவங்கி வைத்தார்
2022-01-21@ 00:06:35

காஞ்சிபும்: கொரோனா பரவாமல் தடுக்க மற்றும் கட்டுபடுத்தும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது இடங்களிலும், விழா நிகழ்ச்சிகளிலும், வழிபாட்டு தலங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடைபிடித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி முறையாக செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி, முகாமை தொடங்கி வைத்தார். இதேபோல், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை எஸ்பி சுதாகர் தொடங்கி வைத்தார். இதில் 100 காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி போலீசாருக்கு எடுத்துக்கூறி, முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் டிஎஸ்பி (பயிற்சி) ஐமன்ஜமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
Kanchipuram District Police Booster Vaccine SP காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி எஸ்பிமேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!