அடகு கடைக்காரருக்கு வெட்டு: வாலிபருக்கு வலை
2022-01-21@ 00:06:31

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே மாமண்டூர் ஊராட்சியில் ஜுவல்லரி மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் தர்மா. நேற்று மாலை மாமண்டூர் அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், நகை அடகு வைக்க, தர்மா கடைக்கு சென்றார். நகை அடகு வாங்குவதில் சந்தேகம் ஏற்பட்டதால், தர்மா நகையை அடகு வாங்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தர்மாவின் தலையில் 4 இடங்களில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயமடைந்த அவர், அலறி துடித்தபடி வெளியே ஓடி வந்தார். இதை பார்த்ததும், அக்கம் பக்கத்தினர், தர்மாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை அரபி பாடசாலை ஆசிரியர் கைது
13 வயது சிறுமி பலாத்காரம்; தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறைதண்டனை
மயிலாடுதுறையில் நள்ளிரவில் பயங்கரம்; வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: 10 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய 3 மாணவர்கள் அதிரடி கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த 300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்து சென்ற கும்பல் கைது: கடலூரில் போலீசார் அதிரடி
வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...