மாமல்லபுரம் அருகே கட்டுமரம் செய்யும் பணியில் மீனவர்கள் மும்முரம்
2022-01-21@ 00:06:27

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த செம்மஞ்சேரி மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர், கேரளாவில் இருந்து தீக்குச்சி மரம் வாங்கி வந்து, இசிஆர் சாலையில் உள்ள பட்டிப்புலம் மீனவர் பகுதியில் வைத்து கட்டுமரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடற்கரையோரம் உள்ள மீனவ குப்பங்களில் உள்ள மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு முக்கியமாக இருப்பது படகுகள். அதில் கட்டுமரம், மோட்டார் பொருத்திய பைபர் படகு, விசைப்படகு என பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். இதில், கட்டு மரத்திலும், சிறிய பைபர் படகிலும், குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே சென்று குறைவான மீன்களே பிடிக்க முடியும். ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க ஏதுவாக விசைப் படகுகள் பயன்படுத்தப்படும். தற்போது கட்டுமரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதுகுறித்து செம்மஞ்சேரி மீனவர்கள் கூறுகையில், கேரளாவில் இருந்து தீக்குச்சி மரம் வாங்கி வந்து கட்டுமரம் தயாரிக்கிறோம். 20 கட்டுமரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தீக்குச்சி மரத்தில் இருந்து கட்டுமரம் மட்டுமே செய்ய முடியும். வேறு, எதற்கும் இந்த மரம் பயன்படாது. கட்டுமரம் மூலம் 10 கிமீ வரை கடலில் சென்று மீன்பிடிக்கலாம். அதில் 3 பேர் பயணம் செய்யலாம். பைபர் படகு, விசை படகில் சென்று மீன்பிடிக்கும்போது, காற்று அதிகமாக வீசினாலோ அல்லது ராட்சத அலையில் சிக்கி கவிழும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும். ஆனால், கட்டுமரத்தில் சென்று மீன்பிடிக்கும்போது, கவிழ்ந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. கட்டுமரத்தை கொண்டு கரை வந்து சேரலாம். ஒரு சில மீனவர்கள் கட்டுமரத்தை பயன்படுத்துவது இல்லை. எனவே, மீனவர்கள் கட்டுமரத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஆந்திர வனப்பகுதிகளில் கோடை மழையால் மோர்தானா அணை நிரம்பி பெரிய ஏரிக்கு செல்லும் உபரிநீர்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களோடு வந்து கதறி அழுத பெண்கள்
வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது
கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் தாழிகள்: ஆய்வாளர்கள் ஆச்சரியம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!