மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் ஊட்டி மரவியல் பூங்காவில் அலங்கார செடிகளுக்கு பாதுகாப்பு
2022-01-20@ 16:37:09

ஊட்டி :ஊட்டியில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில் மரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கும்.
ஆரம்பத்தில் நீர்பனி பொழிவாகவும், தொடர்ந்து உறைபனி பொழிவும் துவங்கும். இதன் காரணமாக தேயிலை செடிகள், வனங்களில் செடி,கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இம்முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கியது. ஆரம்பம் முதலே உறைபனி பொழிவு கொட்டியது. ஊட்டி அருகே தலைக்குந்தா, சோலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி முதல் மைனஸ் 1 டிகிரிக்கும் கீழ் சென்றது. இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது.
இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்தது. இதனால் தேயிலை செடி, புல்வெளிகள் கருகுவதில் இருந்து தப்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு தீவிரமடைய துவங்கியுள்ளது. இதன் காரணமாக ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள அரங்கார செடிகள் பாதிக்காத வகையில் கோத்தகிரி தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர காலை மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!