மகாராஷ்டிராவில் வரும் திங்கட்கிழமை அன்று 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்படும் : மாநில கல்வித்துறை
2022-01-20@ 15:22:52

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது. கொரோனா காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி 25 முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா கல்வித்துறை எடுத்த முடிவு மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி.... 2,296 பேர் குணமடைந்தனர்!!
காஷ்மீரில் டி.வி.நடிகை அம்ரீன் பட்டை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை. 3 நாளில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!!.
ஆட்டோவில் சென்ற நடிகையை அவமதித்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விசாரணையில் ஆளுங்கட்சியினரின் தலையீடா? நடிகை புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஸ்டேடியத்தில் வீரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதி இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிரடி
ஜம்முவில் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறியாட்டம்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!