பக்தர்களின்றி பழநியில் தேரோட்டம்: காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன்
2022-01-19@ 00:23:38

பழநி: பழநி தைப்பூச திருவிழா தேரோட்டம் பக்தர்களின்றி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரிய தேருக்கு பதிலாக பரிவார தெய்வங்கள் செல்லும் சிறிய தேரில் பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடந்தது. இதையொட்டி வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் வடக்கு கிரிவீதியில் உள்ள பாதவிநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாடு செய்து திரும்பிச் சென்றனர். நேற்று காலை சூரிய வழிபாடு செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் காவடி ஆட்டம், அலகு குத்துதல் போன்றவை செய்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு நில அளவீடு பணிக்கு வந்த என்எல்சி அதிகாரிகளை தடுத்து மக்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன்:பேரறிவாளன் பேட்டி
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை பலி
நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்