குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு
2022-01-18@ 15:20:50

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிராகரித்தது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க அலங்கார ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களை மாநில அரசுகளிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. தமிழக அலங்கார ஊர்தியில் வா.உ.சி மற்றும் வேலுநாச்சியாரின் உருவங்கள் இடம்பெற்றிருந்த சூழலில் தற்போது பாதுகாப்பு அமைச்சகம் அதனை ஏற்கனவே நீக்கியதற்கான காரணத்தை தமிழக அரசுக்கு தெரிவித்தாகிவிட்டது. தற்போது அதன் கோரிக்கையையும் நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெற கூடிய நிகழ்வானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆண்டில் தமிழ்நாட்டிற்கான ஊர்தியை ஏற்க பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்து கண்டனங்களை அடுத்து தற்போது அதற்கான கோரிக்கை தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கோரிக்கையையும் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட 25,000 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 8,000ஆக குறைக்கப்படுகிறது.
Tags:
குடியரசு தின விழாமேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு நில அளவீடு பணிக்கு வந்த என்எல்சி அதிகாரிகளை தடுத்து மக்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன்:பேரறிவாளன் பேட்டி
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை பலி
நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்