கந்தர்வகோட்டையில் சம்பா அறுவடைக்கு தயார் மயில்கள் கூட்டத்திடமிருந்து பாதுகாக்க வரப்போரம் சேலைகட்டும் விவசாயிகள்
2022-01-18@ 14:59:52

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டையில் சம்பா அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளதால் மயில்கள் கூட்டத்திடமிருந்து பயிர்களை பாதுகாக்க வரப்போரம் விவசாயிகள் சேலை கட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும், அதனைத் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு சிலர் பிந்தைய நடவு செய்ததால் கதிர் பரிந்து நெல் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
இதனை அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததாலும்,அறுவடை இயந்திரம் கிடைக்காததாலும் அறுவடைக்கு காத்திருக்கும் வேளையில் இந்திய தேசியப் பறவையான மயில்கள் வயல்களில் இறங்கி நெற்கதிர்களை சேதாரம் செய்து வருகிறது. இதனை தடுக்கும் வண்ணம் வயல்களில் உள்ள வரப்புகளை சுற்றிலும் பெண்களின் சேலைகளால் நெல் கதிர்களை மறைக்கும் வண்ணம் கட்டியுள்ளனர். இதனைக் கொண்டு நெல் கதிர்களை மயில்களிடம் இருந்து காத்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
மதியநல்லூரில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்