பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் சின்னாறு தரைப்பாலம் இடிந்து விழுந்தது : போக்குவரத்து நிறுத்தம்
2022-01-18@ 14:55:21

பெரம்பலூர் : பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் கீழப்பெரம்பலூர் சின்னாறு தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ஓடும் சின்னாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தையும்-அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் இந்த தரைப்பாலத்தை கடந்து வேள்விமங்கலம், வீரமநல்லூர் மற்றும் செந்துறை வழியாக அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த வட கிழக்கு பருவமழையின் போது சின்னாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியதால் படிப்படியாக பாலம் பழுதடைந்தது. அந்த பாலத்தின் மீது அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு ஏற்றிவரும் அதிகனரக வாகனங்களும் பயணித்தன. மேலும் அரசு தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி பேருந்துகளும் இந்த பாலத்தை கடந்துசென்று வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென பாலத்தின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியது. இந்தபழுது மேலும் மேலும் வலுவடைந்து தற்போது முற்றிலுமாக இடிந்து உள்ளே விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தைக் கடந்து யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு, சாலையை மூடியுள்ளனர்.
2 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான இந்த பாலம் மூடப்பட்டு விட்டதால் கனரக வாகனங்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.
மேலும் செய்திகள்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
மேட்டுப்பாளையத்தில் பரிதாபம் முதுகலை நீட் தேர்வு பயத்தில் பெண் டாக்டர் தற்கொலை: காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் நடந்த சோகம்
காஞ்சி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு: டாக்டர்கள், ஊழியர்கள் பீதி
ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் 150 பேருக்கு பணி நியமன ஆணை
மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் குளம் அமைக்க மானியம் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்