கொரோனா பரவல் எதிரொலி: கேரள முதல்வர் அலுவலகம் மூடல்
2022-01-18@ 14:52:36

திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தில் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா பரவியதை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன் அலுவலகம் இன்று மூடப்பட்டது. கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று 22,946 பேருக்கு நோய் பரவியது. தொற்று சதவீதம் 33ஐ தாண்டியது. கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 5,863 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாவட்டத்தில் 100 பேரில் 44 பேருக்கு நோய் பரவியுள்ளது.
இதற்கிடையே திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. வனம், அறநிலையத்துறை மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பலருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் இன்று முதல் முதல்வர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மிக முக்கிய அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. இதேபோல தலைமை செயலகத்திலுள்ள மத்திய நூலகமும் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
டி. ஆர். டி. ஓ. அமைப்பின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்: இ-ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடு அம்பலம்
டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: விமானசேவை பாதிப்பால் மக்கள் அவதி
குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி!!
இந்தியாவில் ஒரே நாளில் 2,022 பேருக்கு கொரோனா.. 46 பேர் உயிரிழப்பு.. 2,099 பேர் குணமடைந்தனர்!!
பேட்டரி வடிவமைப்பு குறைபாடும், சரிவர பரிசோதிக்கப்படாததுமே இ - ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க காரணம் : டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்