புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
2022-01-18@ 14:23:43

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1-9ஆம் வகுப்புகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் 10,11,12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்று 2,000தை தாண்டிய நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக,1-9 ஆம் வகுப்புகள் வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
துவாக்குடி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அமர்க்களம்: 300 வீரர்கள் பங்கேற்பு
பூந்தமல்லி அருகே பரபரப்பு தலை, கைகளை துண்டித்து வாலிபர் எரித்துக்கொலை?: குப்பை மேட்டில் உடல் வீச்சு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
பாம்பன் பாலத்தை கடக்க ஒரு வாரம் காத்திருந்த கப்பல்
திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு 20 வது பிறந்த நாள்-பிடித்த உணவு அளித்து கஜபூஜை
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!