பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் மரணம்
2022-01-18@ 02:37:30

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் (73). 1973ம் ஆண்டு ஜீசஸ் என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சினிமா தவிர 42 நாடகங்களையும், 25 நடன நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். இவருக்கு கடந்த 14ம் தேதி கேரள அரசின் ஹரிவராசனம் விருது சபரிமலையில் வைத்து வழங்கப்பட்டது. அதன்பின் ஊர் திரும்பியவர், ரத்த அழுத்தம் காரணமாக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்று இரவு சுமார் 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஆலப்பி ரங்கநாத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கேரள திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...