ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தார் நடிகர் தனுஷ்: சமூக வளைதலங்களில் இருவரும் வெளியிட்டதால் பரபரப்பு
2022-01-18@ 02:33:05

சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து சென்றார். இது தொடர்பான தகவலை இருவரும் சமூக வளைதலத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ‘‘18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்” என்று தெரிவித்துள்ளார். தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்கிறார்; சென்னையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 40 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3006 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!
மதுரை தம்பதியிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ்
தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
‘அனைவருக்கும் தூய்மையான காற்று' என்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்