ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமி கட்டாய திருமணம் பெற்றோர் உட்பட 5 பேர் கைது
2022-01-18@ 01:18:34

ஈரோடு: ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (28). டெய்லர். வாய் பேச முடியாத, காது கோளாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் பணம், நகை ஆசை காட்டிசம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் சிறுமிக்கும், மாரிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறு வயது திருமணம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதற்கு உறுதுணையாக இருந்ததாக அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
திண்டிவனம் அருகே குடிபோதையில் மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தந்தை கைது: பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் மட்டும் நடப்பாண்டில் 124 பேர் குண்டர் சட்டத்தில் கைது : காவல்துறை நடவடிக்கை
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்