மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோவில் கைது
2022-01-17@ 21:17:15

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை நடத்தி வரும் ஓட்டலில் திருமணமான பிரபு (25) என்பவர் கடந்தாண்டு 6 மாதம் வேலை பார்த்து விட்டு நின்று விட்டார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி மாணவியின் தாய் கர்ப்பப்பை சிகிச்சைக்காக கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவி கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரபு மாணவியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அவர் வர மறுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்தொடர்ந்து சென்ற பிரபு, மாணவியை கட்டாயப்படுத்தி பைக்கில் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல், அடிக்கடி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து இதுகுறித்து, மாணவி பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பிரபுவை நேற்று கைது செய்தார்.
மேலும் செய்திகள்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ1.30 லட்சம் அபேஸ்: போலீசார் மீட்டனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்