பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய மாஜி ராணுவ வீரர் சிறையில் அடைப்பு
2022-01-17@ 16:40:52

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர்(56), முன்னாள் ராணுவ வீரர். தற்போது வீட்டில் அரிசி மாவு அரைக்கும் இயந்திரம் வைத்துள்ளார். இவரது மனைவி ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சேகர் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயதான 12ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் நேற்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தனர்.
இதில் சேகர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சேகரின் வீட்டிற்கு சென்று கேட்டனர். அதற்கு சேகர் கர்ப்பத்தை அழிக்குமாறு மிரட்டியதோடு, ₹10 லட்சம் தருவதாக பேரம் பேசினாராம். இதனால், மேலும் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவியை கர்ப்பமாக்கிய சேகரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ1.30 லட்சம் அபேஸ்: போலீசார் மீட்டனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்