இந்திய கடற்படை அலுவலகத்தை செல்போனில் படம் பிடித்த வடமாநில வாலிபர் சிக்கினார்
2022-01-17@ 00:50:42

நாகை : நாகை துறைமுகத்தில் இந்திய கடற்படை போலீசாரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தார். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து புகைப்படம் எடுத்த நபரை சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை போலீசார் அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் இந்தியில் பேசியதுடன் அவரிடம் இருந்து துறைமுகத்தின் வரைபடம், கையில் கட்டும் இரண்டு கடிகாரம், செல்போன் ஆகியவை இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் உத்திரபிரதேச மாநிலம் பாராகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக்சுக்லா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பற்றி நாகை எஸ்பி ஜவஹரிடம் தகவல் தெரிவித்தனர்.
எஸ்பி நேற்று நாகை இந்திய கடற்படை அலுவலகத்திற்கு சென்று அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உத்தரபிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் நாகூர் வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகூரில் பைபர் படகில் ஏறி இரவு நாகை துறைமுகம் வந்து, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம் அலுவலகம் எதிரே அமர்ந்திருந்த அவர் தனது செல்போனில் படம் எடுத்தது தெரியவந்தது.
அவரை படகு மூலம் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டது யார்?, தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்ய திருச்சியில் இருந்து உளவுப்பிரிவு போலீசாரை நாகை எஸ்பி வரவழைத்துள்ளார்.
மேலும் செய்திகள்
கடல் பாசி சேகரிக்கச்சென்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராமேஸ்வரத்தில் சாலை மறியல்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117.92 அடியாக உயர்வு காவிரி டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறப்பு
துவாக்குடி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அமர்க்களம்: 300 வீரர்கள் பங்கேற்பு
பூந்தமல்லி அருகே பரபரப்பு தலை, கைகளை துண்டித்து வாலிபர் எரித்துக்கொலை?: குப்பை மேட்டில் உடல் வீச்சு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!