மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் கைது
2022-01-17@ 00:49:46

*கோவில்பட்டியில் தனிப்படை சுற்றிவளைத்தது
விருதுநகர் : ஆவினில் வேலை வாங்கி தருவதாக ₹3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதாகி, ஜாமீனில் வெளிவந்த நிலையில், முதல் குற்றவாளியான விஜயநல்லதம்பியை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், தனது சகோதரி மகன் ஆனந்திற்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ₹30 லட்சம் மோசடி செய்ததாக, அதிமுக ஒன்றியச் செயலாளரும், சாத்தூர் ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான விஜயநல்லதம்பி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த நவ. 15ல் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து, விஜயநல்லதம்பியிடம் விசாரித்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஒன்றியச் செயலாளர் விஜயநல்லதம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஆவின், சமூக நலத்துறை உள்பட பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கி தருவதாகவும் ₹3 கோடியை ராஜேந்திரபாலாஜி, உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேரிடம் கொடுத்ததாக விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இதன்பேரில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராஜேந்திரபாலாஜி கர்நாடகா மாநிலம், ஹாசனில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ஜன. 12ல் விடுவிக்கப்பட்டார். இந்த மோசடி வழக்கின் முதல் குற்றவாளியும், ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்தவருமான விஜயநல்லதம்பியை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர், கோவில்பட்டி அருகில் புளியங்குளத்தில் உள்ள சித்தா சிகிச்சை மையத்தில் பதுங்கியிருந்து செல்போனில் பேசி வருவது சிக்னல் மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில், தனிப்படை போலீசார் விஜயநல்லதம்பியை சுற்றி வளைத்தனர். இதையறிந்த அவர் வெளியே வந்து போலீசாரிடம் சரணடைந்தார். நேற்று அதிகாலை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், வேலை வாங்கி தருவதாக யார், யாரிடம் எவ்வளவு பணம் பெற்று ராஜேந்திரபாலாஜி மற்றும் உதவியாளர்களிடம் கொடுக்கப்பட்டது. பணம் கொடுத்தற்கான அத்தாட்சி நகல்கள், சாட்சிகள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
பாம்பன் பாலத்தை கடக்க ஒரு வாரம் காத்திருந்த கப்பல்
திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு 20 வது பிறந்த நாள்-பிடித்த உணவு அளித்து கஜபூஜை
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நுங்கு வியாபாரம் விறுவிறுப்பு
கறம்பக்குடி அருகே தீ விபத்து தைல மரக்காடு, வாழை தோப்பு எரிந்து சேதம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27ம் தேதி 3 மணிநேரம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!