அமெரிக்காவின் தடைக்கு பதிலடி ரயிலில் இருந்து ஏவுகணை: மிரட்டுகிறது வடகொரியா
2022-01-16@ 03:33:06

*ஒரே மாதத்தில் 3வது முறை
சியோல் : அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா நேற்று ரயிலில் இருந்து 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனைகளை நடத்தியது. ஐநா அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் பொருட்படுத்தாது வடகொரியா ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கொரோனா தொற்று, பொருளாதாரத் தடைகள், அதிபர் கிம் ஜாங் உன்னின் நிர்வாக தவறுகளினால் வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், ஏவுகணை சோதனையை வடகொரியா நிறுத்தவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நடத்திய 2 ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியாவின் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால், இதற்கு சவால் விடும் வகையில் நேற்று முன்தினமும் வடகொரியா அடுத்தடுத்து 2 குறுகிய தூர ஏவுகணைகளை ரயிலில் இருந்து ஏவி சோதனை செய்தது.
தென்கொரியாவின் நிலப்பகுதியில் 430 கிமீ தூரத்தை 36 கிமீ உயரத்தில் 2 ஏவுகணைகள் 11 நிமிடங்களில் கடந்து சென்று, கடலில் இருந்த இலக்கை தகர்த்தன. இது, இந்த மாதத்தில் நடத்தப்படும் 3வது சோதனையாகும். ஏற்கனவே, கடந்த 5ம் தேதி தொலைதூர ஏவுகணை, கடந்த 11ம் தேதி ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.
மேலும் செய்திகள்
கூடுதல் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடி; கனடா பிரதமரின் மனைவி ரஷ்யாவிற்குள் நுழைய தடை
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!
திவாலுக்கு வரிசை கட்டி நிற்கும் நாடுகள்: இலங்கை... ஓர் ஆரம்பம்! முழுமையாக ஸ்தம்பிக்கும் உலக பொருளாதாரம்
2 வாரங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசரநிலை வாபஸ்: மாணவர்கள் பேரணியில் தடியடியால் பரபரப்பு
ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி: பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்