முகக்கவசம் அணியும்படி கூறிய போலீஸ்காரருக்கு பளார் மாணவன் கைது
2022-01-16@ 00:59:10

பெரம்பூர் : புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த உத்திரகுமார் (31), கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை எம்.ஆர்.நகர் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, முகக்கவசம் அணியாமல் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி, முகக்கவசம் அணிந்து செல்லும்படி கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர், தகராறில் ஈடுபட்டு உத்திரகுமார் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, வியாசர்பாடி புதுநகர் 8வது தெரு பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் (21) என்பதும், சட்டக்கல்லூரி மாணவன் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!