'பந்துவீச்சாளர் நடராஜன் தான் என் ரோல் மாடல்' ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட தகுதி பெற்ற நெசவுத்தொழிலாளியின் மகன் லோகேஸ்வரன் பேச்சு
2022-01-15@ 14:49:41

நாமக்கல்: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி தாய் நாட்டிற்காக சாதிப்பதே தனது லட்சியம் என ரஞ்சி கோப்பை போட்டி தொடரில் விளையாட தேர்வாகியுள்ள நாமக்கல் மாவட்ட இளம் வீரர் லோகேஸ்வரன் சூளுரைக்கிறார். நாமக்கல் மாவட்டம் பாய்ச்சல் வட்டம் கடந்தப்பட்டி மேட்டு தெருவைச் சேர்ந்த கைத்தறி நெசவாளரின் மகனான லோகேஸ்வரன் தற்போது தமிழ்நாடு அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் விளையாட தேர்வாகியிருக்கிறார். துரைசாமி- சாந்தி தம்பதியின் 3- வது மகனான லோகேஸ்வரன், ராசிபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்சீனியரிங் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இடது கை பேட்ஸ்மேன் ஆகவும், வலது கை பந்துவீச்சாளராகவும் உள்ள இவர் இந்திய அணியில் தேர்வாவதே தனது லட்சியம் என்று கூறுகிறார். ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டயா ஆகியோரின் ஆட்டத்தால் கவரப்பட்ட லோகேஸ்வரன் சேலம் வீரர் நடராஜனை முன்னுதாரணமாக கொண்டு விளையாடி வருகிறார். கோவையில் நடந்த cpl போட்டியில் சாதித்துள்ளார்; கார்ப்பரேட் பிரீமியம் லீக் போட்டிக்கு தகுதி பெற்று சிறப்பாக விளையாடினார். அதை தொடர்ந்து மும்பை மெட் கிளப்பில் விளையாடிய லோகேஸ்வரன் ரஞ்சி கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார். வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரூ.45,000 கொடுத்து உதவியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!