சென்னையில் தீவிர சோதனை முகக்கவசம் அணியாத 5,640 பேர் மீது வழக்கு: ரூ.11.28 லட்சம் அபராதம்
2022-01-14@ 17:46:04

சென்னை: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 6ம் தேதி முதல் 31ம் ேததி வரை வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியதாக 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 284 இருசக்கர வாகனங்கள், 8 ஆட்டோக்கள் மற்றும் 5 லகுரக வாகனங்கள் என மொத்தம் 297 வாகனங்களை சட்டம் ஒழுங்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், முகக்கவசம் அணியாத 5,640 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.11,28,000 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 30 வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.15,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் போதையில் வாகனம் ஓட்டியதாக 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ என மொத்தம் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!