பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: ஒலியை விட 3 மடங்கு அதிக வேகம்
2022-01-12@ 00:01:35

புதுடெல்லி: ஒலியை விட 3 மடங்கு அதிக வேகமாக பறந்து தாக்கும் மேம்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பாகும். இந்த ஏவுகணையை கடலுக்கடியில் இருந்தும், கப்பல், விமானம், நிலத்தில் இருந்தும் விண்ணில் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இது குறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தனது டிவிட்டரில், ‘கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் மேம்பட்ட ஏவுகணை, ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ என்ற போர் கப்பலில் இருந்து நேற்று ஏவி பரிசோதிக்கப்பட்டது. அது, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கப்பலை துல்லியாக தாக்கி அழித்து வெற்றி பெற்றது,’ என குறிப்பிட்டுள்ளது.
வழக்கமாக, ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில்தான் இதுபோன்ற ஏவுகணைகளின் சோதனை நடைபெறும். ஆனால், நேற்று இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்ற விவரம் கூறப்படவில்லை. இந்நிலையில், இந்திய கடற்படைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘பிரமோஸ் மேம்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியால் இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை வெற்றிகரமாக்கிய குழுவுக்கு வாழ்த்துக்கள்.’ என குறிப்பிட்டுள்ளார்.
* பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது. இதை வீரர்களே கைகளில் தூக்கிச் சென்று, இலக்கை நோக்கி வீச முடியும் என்பது மிகப்பெரிய சிறப்பு அம்சம்.
Tags:
Promos missile test success sound 3 times high speed பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி ஒலி 3 மடங்கு அதிக வேகம்மேலும் செய்திகள்
காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!