கரும்பு விவசாயிகள் நலனுக்காக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வேண்டுகோள்
2022-01-07@ 00:15:35

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஊழியர்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. நடப்பாண்டில் கரும்பு மகசூல் அதிகரித்ததையடுத்து 60,000 டன் பதிவு செய்யப்பட்ட கரும்புகளும், 17,000 டன் பதிவு செய்யப்படாத கரும்புகளும் அரவைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆலையின் பராமரிப்பு செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன்பணம் ஆகியவற்றிற்கு பத்து கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஆலை ஊழியர்களின் ஊதியத்திற்கு ரூ.11 கோடியே 16 லட்சம் தேவைப்படுவதாகவும் ஆலை நிர்வாகம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலையை இயக்குவதன் மூலம் 10,000 கரும்பு விவசாயிகளும், 500 தொழிலாளர்களும் நேரடியாக பயன் பெறுவர் என்பதோடு, கரும்பு வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி இயக்குபவர்களும், அதை சார்ந்த தொழிலாளர்களும், விவசாய கூலித் தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் பயன்பெறுவார்கள். எனவே, கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, மதுரையில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:
Sugarcane Farmers National Cooperative Sugar Mill Open OBS கரும்பு விவசாயிகள் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க ஓபிஎஸ்மேலும் செய்திகள்
ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
சொல்லிட்டாங்க...
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி
கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி முழுமையாக குணமடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!